India
நீர்வீழ்ச்சியில் மனைவியை நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய கணவன்.. போலி சாமியார் பேச்சால் நடந்த கொடூரம்!
மகாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த பெண்ணுக்கு 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரது கணவர் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் கணவரும் அவரது குடும்பத்தினரும் ஆண் குழந்தை பிறக்க வேண்டி சாமியார்களைச் சந்தித்து வந்துள்ளனர்.
அவர்கள் கூறியதைக் கேட்டு அந்த பெண்ணை பல சடங்குகள் செய்ய வலியுறுத்தி கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அவரது கணவர் கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு சாமியாரைச் சந்தித்துள்ளார்.
அப்போது அவர் ஆண்குழந்தை வேண்டும் என்றால் நீர் வீழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக மனைவியை குளிக்கச் சொல் என கூறியுள்ளார். இதையடுத்து அவரது கணவரும், மாமியார் மற்றும் குடும்பத்தினர் அந்த பெண்ணை ராய்காட் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பிறகு அவர் நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர், சாமியார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!