India
போலிஸ் உடையில் ஆபாசம்.. 2 வருடத்துக்கு பின்னர் வெளியான வீடியோ.. வசமாக சிக்கிய தலைமை காவலர் !
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் அமைந்துள்ள பங்கர்மாவ் கோட்வாலி காவல்நிலையத்தில் தீப் சிங் என்பவர் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் காவல்நிலைய உடையில் ஒரு பெண்ணுடன் ஆபாசமான செயலில் ஈடுபடும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது.
ஒன்பது வினாடிகள் கொண்ட வீடியோ அந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
தீப் சிங்கிடம் விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் விசாரணை முடியும் வரை அவரை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் அவர்மேல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியான தகவலின்படி அந்த வீடியோ சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும், மறைமுக கேமரா மூலம் அந்த பெண்ணே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் அந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக போலிஸார் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ காவல்துறை தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் பிற காவலர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பி தினேஷ் திரிபாதி கூறியுள்ளார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!