India
போலிஸ் உடையில் ஆபாசம்.. 2 வருடத்துக்கு பின்னர் வெளியான வீடியோ.. வசமாக சிக்கிய தலைமை காவலர் !
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் அமைந்துள்ள பங்கர்மாவ் கோட்வாலி காவல்நிலையத்தில் தீப் சிங் என்பவர் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் காவல்நிலைய உடையில் ஒரு பெண்ணுடன் ஆபாசமான செயலில் ஈடுபடும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது.
ஒன்பது வினாடிகள் கொண்ட வீடியோ அந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
தீப் சிங்கிடம் விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் விசாரணை முடியும் வரை அவரை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் அவர்மேல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியான தகவலின்படி அந்த வீடியோ சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும், மறைமுக கேமரா மூலம் அந்த பெண்ணே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் அந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக போலிஸார் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ காவல்துறை தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் பிற காவலர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பி தினேஷ் திரிபாதி கூறியுள்ளார்.
Also Read
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!