India
போலிஸ் உடையில் ஆபாசம்.. 2 வருடத்துக்கு பின்னர் வெளியான வீடியோ.. வசமாக சிக்கிய தலைமை காவலர் !
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் அமைந்துள்ள பங்கர்மாவ் கோட்வாலி காவல்நிலையத்தில் தீப் சிங் என்பவர் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் காவல்நிலைய உடையில் ஒரு பெண்ணுடன் ஆபாசமான செயலில் ஈடுபடும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது.
ஒன்பது வினாடிகள் கொண்ட வீடியோ அந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
தீப் சிங்கிடம் விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் விசாரணை முடியும் வரை அவரை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் அவர்மேல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியான தகவலின்படி அந்த வீடியோ சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும், மறைமுக கேமரா மூலம் அந்த பெண்ணே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் அந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக போலிஸார் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ காவல்துறை தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் பிற காவலர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பி தினேஷ் திரிபாதி கூறியுள்ளார்.
Also Read
-
ஆபாச வீடியோ விவகாரம் : பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்க உதவியவர் யார்? மோடி மௌனத்தை குறிப்பிட்டு D.ராஜா கேள்வி!
-
பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !
-
பெண்கள் குறித்து ஆபாச கருத்து : வழக்கை சந்திக்குமாறு பாஜக பிரமுகர் H ராஜாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம் !
-
3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !