India
போலிஸ் உடையில் ஆபாசம்.. 2 வருடத்துக்கு பின்னர் வெளியான வீடியோ.. வசமாக சிக்கிய தலைமை காவலர் !
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் அமைந்துள்ள பங்கர்மாவ் கோட்வாலி காவல்நிலையத்தில் தீப் சிங் என்பவர் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் காவல்நிலைய உடையில் ஒரு பெண்ணுடன் ஆபாசமான செயலில் ஈடுபடும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது.
ஒன்பது வினாடிகள் கொண்ட வீடியோ அந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
தீப் சிங்கிடம் விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் விசாரணை முடியும் வரை அவரை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் அவர்மேல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியான தகவலின்படி அந்த வீடியோ சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும், மறைமுக கேமரா மூலம் அந்த பெண்ணே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் அந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக போலிஸார் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ காவல்துறை தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் பிற காவலர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பி தினேஷ் திரிபாதி கூறியுள்ளார்.
Also Read
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!
-
ஒன்றிய அரசுடன் விஜய் நெளிந்து குழைந்தது ஏன்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா? : முரசொலி சரமாரி கேள்வி!