India
திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு.. இமாச்சல பிரதேசத்தில் ஒரேநாளில் 22 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி !
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அங்கு திடீரென கனமழை பெய்தது. குறைந்த நேரத்தில் அதிக கனமழை பெய்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. திடீர் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதில் மண்டியாவில் உள்ள ஒரு இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். இங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மேலும் 5 பேர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதுபோல காங்க்ரா, ஹமீர்பூர் மாவட்டங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் பெரும்பாலான சாலைகள் கடுமையாக சேதம் அடைந்திருப்பதால் மீட்பு பணியில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுக்க மீட்டுப்படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு இன்னும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட மேகவெடிப்பால் மாநிலத்தில் 22 பேர் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!