India

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்.. அடுத்தடுத்த வீடுகளில் அழுகி கிடந்த சடலங்கள் : பகீர் சம்பவம்!

ஜம்முவின் புறநகர் பகுதியில் உள்ளது தாவி விஹாரி். இங்கு இரண்டு வீடுகளில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இது போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலிஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது, முதலில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது அழுகிய நிலையில் 4 சடலங்கள் இருந்தை போலிஸார் கண்டுள்ளனர். பிறகு அருகே இருந்த வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே சென்றபோது அங்கு இரண்டு சடலங்கள் இருந்துள்ளன. இதையடுத்து இந்த 6 உடல்களையும் மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இறந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் சகினா பேகம், அவரது மகள் நசீமா அக்தர், ருபீனா பானோ, மகன் சாஃபர் சலிம், உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமத் ஆகியோர் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் 6 பேர் மர்ம மரணம் குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாராவது கொலை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Also Read: நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவர்.. பெங்களூவில் பதறவைத்த சம்பவம் !