India

ஓடும் ரயிலில் இருந்து வாலிபரை தூக்கி வீசிய கும்பல்: பயணிகள் அதிர்ச்சி!

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவி யாதவ். இவர் தனது சகோதரியுடன் நேற்று முன்தினம் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். பின்னர் ரயில் ஜிரோலி கிராமம் அருகே வந்துள்ளது.

அப்போது ரவி யாதவ்வுக்கு தண்ணீர் பாட்டில் வாங்குவது தொடர்பாக ரயிலில் இருந்த பான்ட்ரி ஊழியர்களுக்கு இடையே தாகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசம் அடைந்த ஊழியர்கள் ஓடும் ரயிலில் இருந்து ரவி யாதவை தூக்கி வீசியுள்ளனர்.

இதைப்பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு ரயில் நின்ற பிறகு பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு ரவி யாதவ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ரயில்வே ஊழியர் ஒருவரைக் கைது செய்து இதில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில் இருந்து ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: E-Rickshaw-வுக்கு சார்ஜ் செய்தபோது நடந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!