India
சாலையில் சென்றபோது திடீரென வெடித்த பேட்டரி.. பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: உடல் கருகி வியாபாரி பலி!
புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம் பாக்கம் மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். நெல் வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த 31ம் தேதி இரவு தவளகுப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதனைச் சற்றும் எதிர்பாராத வேணுகோபால் மீதும் தீ பிடித்துள்ளது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இதில், வேணுகோபால் நெல் வியாபாரம் செய்வதால் அடிக்கடி பணத்தை இருசச்கர வாகனத்தில் எடுத்துச் செல்வது வழக்கம். இரவு நேரத்தில் வாகனத்தில் வெளிச்சம் இருப்பதற்காக எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தியுள்ளார். இதற்காகக் கூடுதலாக வாகனத்தில் பேட்டரிகளை பொருத்தியுள்ளார். இந்நிலையில்தான் சம்பவத்தன்று வாகனத்திலிருந்த பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!