India
ஓய்வு பெற்ற பெண் ஆசிரியர்.. தாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்: நெகிழ்ந்த கிராமம்!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்தவர் சுசீலா சவுகான். பெண் ஆசிரியரான இவர் கடந்த 33 ஆண்டுகளாக கேசர்புரா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த சனிக்கிழமை சுசீலா சவுகான் பணி ஓய்வு பெற்றுள்ளார். இது குறித்து அறிந்த அமெரிக்காவில் இருக்கும் அவரது மகன் யோகேஷ் சவுகான் நான்கு நாட்களுக்கு முன்பு கிராமத்திற்கு வந்துள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெரும் தனது தாய்க்கு ஏதாவது வாழ்வில் மறக்க முடியாத பரிசு கொடுக்க வேண்டும் என யோகேஷ் சவுகான் திட்டமிட்டுள்ளார். பின்னர் சனிக்கிழமையன்று ஓய்வுபெற்ற தனது தாயை ஹெலிகாப்டரில் கிராமத்திற்கு அழைத்து வந்தார்.
இதைப்பார்த்த கிராம மக்கள் அங்குக் கூடி ஆசிரியர் சுசீலா சவுகானுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இதைச்சற்றும் எதிர்பாராத அவர் இன்ப வெள்ளத்தில் மூழ்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!