India
“MPக்களை சஸ்பெண்ட் செய்வது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல”: மோடி அரசுக்கு எதிராக மக்களவையில் கொந்தளித்த ஆ.ராசா
மக்களவை நேற்று முன் தினம் கூடியதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் குறித்து பிரச்சனை எழுந்தது. அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘விதிகளை மீறினால் நடவடிக்கைதான். நடவடிக்கை எடுக்க விரும்பாத என்னை அதைச் செய்ய வைத்துவிடுவீர்கள் என அஞ்சுகிறேன். தயவு செய்து ஒத்துழையுங் கள்” என்றார்.
இதை எம்.பி.க்கள் ஏற்க மறுக்கவே அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட் டது. மதியத்துக்குப் பிறகு அவைகூடிய போது, கழகக் கொறடா ஆ.ராசா பேசினார். அவர் பேசியதாவது : “எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல. சபையின் மையப் பகுதிக்கு வருவதோ, ஜனநாயக முறைப்படி போஸ்டர்களை ஏந்தி கோஷம் போடுவதோ, புதிய விஷயம் இல்லை. இருந்தும் சபா நாயகர் நடவடிக்கை எடுத்து விட்டார்.
நீங்கள் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான விவாதங்களுக்கு முன், எண்ணிக்கை பலம் நிற்கவே முடியாது. எனவே, சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யுங்கள்.” இவ்வாறு ஆ.ராசா பேசினார்.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!