India
ரூ. 3,419 கோடிக்கு மின்கட்டணம்.. பார்த்ததும் மயக்கமடைந்த வீட்டின் உரிமையாளர்.. ம.பி.யில் அதிர்ச்சி!
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியார் நகரில் உள்ள ஷிவ் விஹார் காலனியை சேர்ந்தவர் பிரியங்கா குப்தா. இவர் வழக்கம் போல தனது வீட்டின் மின் கட்டணம் குறித்து பார்த்தபோது அது 3,419 கோடி என காட்டியுள்ளது. இதனால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் பிரியாங்கா குப்தாவின் மாமனார் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் பிரியங்கா குப்தா தன் கணவர் சஞ்சீவ் கன்கனேவை மின்கட்டண தொகை அதிகரிப்பு குறித்து விசாரிக்க மின்சார அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார். அங்கு அவர் விசாரித்தபோது, கட்டண குழப்பத்தால் இந்த தவறு நேர்ந்தது என கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் உள்ளூர் செய்திகளில் வெளியான நிலையில், இது குறித்து மத்தியப் பிரதேச மின்சாரத்துறை விளக்கமளித்துள்ளது. அதில், மனித தவறு காரணமாக இந்த குளறுபடி ஏற்பட்டது என்றும், அந்த 3,419 என்ற எண்ணிக்கையில் நுகரப்பட்ட யூனிட்டுகளுக்குப் பதிலாக ஊழியர் ஒருவர் நுகர்வோர் எண்ணை உள்ளிட்டதால் இந்த தொகை வந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவரின் மின் நுகர்வுக்கான சரியான தொகை ரூ.1,300 என்றும் அது குறித்த விவரம் அவருக்கு அனுப்பப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமாக மின்சார துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மின்சாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்!” : உதயநிதி அறிவுறுத்தல்!
-
“அயலகத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய தவெக அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
-
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : அரசின் நடவடிக்கை என்ன? - பேரவையில் மனோஜ் பாண்டியன் கேள்வி!
-
டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?