India
விவசாய நிலத்தில் விழுந்து சுக்குநூறாக உடைந்த சிறிய விமானம்.. பதறியடித்து ஓடிவந்த கிராம மக்கள்!
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்திற்குட்பட்ட கட்பன்வாடி கிராமத்தில் இன்று காலை வானில் பறந்து கொண்டிருந்த சிறிய விமானம் ஒன்று திடீரென விவசாய நிலத்தில் விழுந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் பதறியடித்து அங்கு வந்து பார்த்தபோது சிறிய விமானம் உடைந்திருந்தது. மேலும் அதன் உள்ளே பெண் விமானி காயத்துடன் இருந்துள்ளார். அவரை உடனே பொதுமக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் விசாரணை செய்தபோது விவசாய நிலத்தில் தரையிறங்கியது பயிற்சி விமானம் என்று தெரியவந்தது. மேலும் 22 வயது பெண் பவிகா ரத்தோட் விமானத்தை இயக்கி வந்ததும் தெரிந்தது.
அதேபோல், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரச்சனையை உடனே அறிந்து விவசாய நிலத்தில் விமானத்தைத் தரையிறக்கியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் விமானி பவிகா ரத்தோட் அச்சமில்லாமல் இந்த செயலை செய்துள்ளார் என உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் மற்றும் விமான உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!