India
சோதனை சென்ற இடத்தில் Fridge-ஐ திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நடந்தது என்ன?
வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர். இவர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அரவது உறவினர் அவருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ஜாகீர் அவரின் தொலைப்பேசி அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அங்குச் சென்றனர்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தபோது அதில் ஆண் சடலம் ஒன்று இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிறகு அந்த சடலம் குறித்து விசாரணை செய்தபோது, இந்த வீட்டில் வசித்து வந்த ஜாகீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக போலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த மர்ம மரணம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜூக்குள் ஆண் சடலம் ஒன்றை போலிஸார் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க-வின் கோரிக்கையை இன்று கையில் எடுத்துள்ள இளைஞர்கள் : டெல்லியில் மாபெரும் போராட்டம் - முரசொலி!
-
பரபரப்பான சென்னை.. டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்.. காவல்துறையின் செயலால் அதிர்ச்சி!