India
காரோடு தீவைத்து கொளுத்திக் கொண்ட குடும்பம்.. தொழிலதிபர் முடிவுக்கு காரணம் என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ராவ் பட். தொழிலதிபரான இவர் வெளியே சென்று ஓட்டலில் சாப்பிடலாம் என கூறி தனது மனைவி, மகனை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்ற பிறகு ராம்ராவ் காரை நிறுத்தியுள்ளார். பிறகு திடீரென காரில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மனைவி, மகன் மற்றும் தன்மீதும் ஏற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதில் மூன்று பேரும் காரோடு சேர்ந்து எரிந்துள்ளனர். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதையடுத்து தீக்காயம் அடைந்த மனைவி மற்றும் மகனைமீட்டு மருத்துவமனையில் போலிஸார் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். ஆனால் ராம்ராவ் பட் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
மேலும் ராம்ராவ் பட் தற்கொலைக்கு முன்பு எழுதி கடிதம் ஒன்றை போலிஸார் மீட்டுள்ளனர். அதில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். கடன் தொல்லை காரணமாக குடும்பத்தையே காரோடு சேர்த்து தொழிலதிபர் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!