India
"தேசியக் கொடியை ஒருபோதும் BJP, RSS மதித்ததில்லை": பாஜக-வின் சுதந்திர வாரம் கொண்டாட்டம் - அகிலேஷ் கண்டனம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11 முதல் 17ம் தேதி வரை 'சுதந்திர வாரம்' என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதையடுத்து உத்தர பிரதேச பா.ஜ.க அரசின் இந்த பொய்யா தேசபக்திக்குப் பலரும் கண்டித்து விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக விடுதலை போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தற்போது திடீரென சுதந்திர தினத்தைக் கையில் எடுப்பது ஏன்? தேசியக் கொடியே மதிக்காதவர்கள் இப்போது சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஒருபோதும் தேசியக்கொடியை மதித்ததில்லை என யோகியின் 'சுதந்திர வாரம்' கொண்டாட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்த ஒரு பங்கும் பெறாத இவர்கள் தற்போது தேசபக்தி பற்றிப் பேசுகிறார்கள். சுதந்திர இயக்கத்துடன் துளிகூட தொடர்பு இல்லாத இவர்கள் எப்படி தியாகிகளுக்கு மரியாதை கொடுப்பார்கள்.
பா.ஜ.கவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்- சும் ஒரு போதும் தேசியக் கொடியை மதித்ததில்லை. மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே தற்போது சுதந்திர தினத்தைக் கையில் எடுத்துள்ளனர். இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் தொடர்ச்சியாக இந்தியாவில் தேசியக் கொடிக்குப் பதிலாகக் காவிக்கொடியை ஏற்றுவோம் என பேசிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் சுதந்திர வாரம் கொண்டாடப்படுவது அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!