India
ஈரத்துணிகளை கம்பியில் காயப்போட்ட பெண்.. மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி !
தெலங்கானா மாநிலம், கமரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் அகமது (38). இவருக்கு திருமணம் ஆகி, பர்வீன் (32) என்ற மனைவியும், 6 மற்றும் 4 வயதில் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது அங்கிருக்கும் தேவனப்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட, பீடி காலனியில் வசித்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல், பர்வீன் தனது துணிகளை துவைத்து காயப்போட முற்பட்டுள்ளார். அப்போது வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால், உள்ளிருக்கும் ஒரு உலோக கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார்.
அப்போது எதிர்ப்பாரா விதமாக, அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்ததால், பர்வீன் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. துடித்துக்கொண்டிருந்த பர்வீனை காப்பாற்ற அவரது கணவர் அகமது முயற்சி செய்தார்.
அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மேலும் அருகில் விளையாடிக்கொண்டிருந்த அவர்களது குழந்தைகள் மீதும் மின் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அனைவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!