India
ஆட்சியை கவுக்க ரூ.92 லட்சம் செலவு.. கூவத்தூர் பாணியில் புகுந்து விளையாடிய அதிருப்தி MLA-க்கள் !
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்டு 'மகா விகாஸ் அகாடி ' என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த கூட்டணியை விடுத்து பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் முகாமிட்டார்.
அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஏறத்தாழ 8 நாட்களாக சுமார் 50 ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் கட்டண விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தியில், "மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்கள் 50 பேர், 70 அறைகளில் 8 நாட்கள் தங்கியிருந்தனர். அவர்கள் ஓட்டலில் இருந்து செக் அவுட் செய்வதற்கு முன் முழு பில் தொகையையும் செலுத்திவிட்டனர்.
ஜூன் 22 முதல் ஜூன் 29-ம் தேதி வரை ஓட்டலின் பல்வேறு தளங்களில் மொத்தம் 70 அறைகளில் தங்கியிருந்த அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்த 8 நாட்களில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கான உணவு கட்டணம் மட்டும் சுமார் ரூ.22 லட்சமாகும்.சுப்பீரியர் மற்றும் டீலக்ஸ் உட்பட இரண்டு வகை அறைகளிலும் எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்தனர்.
மொத்த பில் குறித்து ஓட்டல் அதிகாரிகள் முழு விபரங்களை வெளியிடவில்லை எனினும் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ரூ.68 முதல் 70 லட்சம் வரை ஹோட்டல் நிர்வாகத்திடம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தற்போது ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!