India
திருட வந்த இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. Party முடிந்ததும் போலிஸிடம் ஒப்படைத்த குடும்பம்! VIRAL VIDEO
டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ஒன்றில் உள்ள வீட்டில், யாருமில்லாத சமயத்தில் 3 மர்ம நபர்கள் திருட சென்றுள்ளனர். அப்போது திடீரென்று வீட்டில் இருந்த நபர்கள் திருடர்களை கண்டனர். இதனால் 3 திருடர்களும் பதறியடித்து தப்பிக்க முயன்றுபோது, அதில் ஒரு திருடனை மட்டும் பிடித்து விசாரித்தனர். அப்போது அது ஒரு சிறுவன் என்று தெரியவந்தது.
தொடர்ந்து விசாரித்த போது, கதறி அழுதுகொண்டே தனக்கு இன்று பிறந்தநாள். எனவே தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி மன்னிப்புகேட்டுள்ளார். மேலும் தனக்கு சிறுவயதில் இருந்தே தந்தை இல்லை, தனது குடும்பம் மிகுந்த பண நெருக்கடியில் உள்ளது என்று தனது சோகக்கதையை அழுது புலம்பியுள்ளார்.
இதைக்கேட்ட அந்த குடும்பத்தினர், தடாலடியாக ஒரு கேக்கை வரவைத்தனர். சோர் (திருடன்) என்று பெயர் இடம்பெற்றிருந்த அந்த கேக்கை, அந்த திருடன் கையால் வெட்ட வைத்து "Happy Birthday" பாடலையும் பாடி மகிழ்ந்தனர். 'என்ன நடக்கிறது?' என்று அந்த சிறு திருடன் முழித்து முழித்து பார்க்க, உடனே சட்டென்று அருகிலிருந்த நபர் ஒருவர் அவனுக்கு கேக்கை எடுத்தது ஊட்டி விட்டார். இதையடுத்து அந்த திருடனை காவல்துறையில் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகையில், அது குறித்து தேடினோம்.
அப்போது கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம், தற்போது மீண்டும் சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோவை கடந்த 3 நாட்களுக்கு முன்பு குஷ்பூ மட்டூ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !