India
30 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்.. 8 மணி நேரத்தில் மீட்ட பேரிடர் குழு!
மத்திய பிரதேச மாநிலம், நாராயண்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் யாதவ். இவரது 5 வயது மகன் திபேந்திரா யாதவ். சிறுவன் அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கிருந்த மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது சிறுவன் 30 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது தெரியவந்துள்ளது.
உடனே இது குறித்து போலிஸாருக்கும், பேரிடர் மீட்பு குழுவினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கு வந்த பேரிடர் குழுவினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது மழை பெய்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
இருந்த போதும் தொடர் மழைக்கு இடையே மீட்பு பணி நடைபெற்றது. சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறுக்கு அறுகே 25 ஆழத்திற்கு வேறு துளையிட்டு அதன் வழியாக பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆய்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 8 மணி நேரத்தில் மீட்ட பேரிடர் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளனர்.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!