India
30 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்.. 8 மணி நேரத்தில் மீட்ட பேரிடர் குழு!
மத்திய பிரதேச மாநிலம், நாராயண்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் யாதவ். இவரது 5 வயது மகன் திபேந்திரா யாதவ். சிறுவன் அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கிருந்த மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது சிறுவன் 30 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது தெரியவந்துள்ளது.
உடனே இது குறித்து போலிஸாருக்கும், பேரிடர் மீட்பு குழுவினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கு வந்த பேரிடர் குழுவினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது மழை பெய்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
இருந்த போதும் தொடர் மழைக்கு இடையே மீட்பு பணி நடைபெற்றது. சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறுக்கு அறுகே 25 ஆழத்திற்கு வேறு துளையிட்டு அதன் வழியாக பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆய்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 8 மணி நேரத்தில் மீட்ட பேரிடர் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளனர்.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!