India

பல் விளக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்த கணவனை தடுத்த மனைவி : ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்!

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கும் கோவையை சேர்ந்த தீபிகா என்ற இளம்பெண்ணுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுது. இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருப்பினும் பணியின் காரணமாக பெங்களூருவில் இருந்த அவினாஷ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் தனது வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது வீட்டில் இருந்தே வேலை பார்த்து வரும் அவினாஷ், குழந்தையை ஆசையாய் தூக்கி கொஞ்சுவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, வழக்கம்போல் காலையில் எழுந்ததும் தனது குழந்தையை ஆசையாய் தூக்கி முத்தம் கொடுத்துள்ளார். இதனைக்கண்ட அவரது மனைவி தீபிகா, பல்லை கூட தேய்க்காமல் முத்தம் கொடுக்கிறாராயா? என்று கணவனை திட்டியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பல நோய்கள் பரவும் சூழ்நிலையில் கணவனின் இந்த செயலால் மிகுந்த கோபமடைந்த தீபிகா கணவரிடம் விடமால் சண்டையிட்டுள்ளார்.

இந்த சண்டையில் கோபம் உச்சத்தில் அடைந்த அவினாஷ், தனது மனைவி தீபிகாவை அருகில் இருந்த கத்தியை எடுத்து தாக்கியுள்ளார். இதனால் கத்தி கூச்சலிட்ட தீபிகாவை மீண்டும் குத்தியுள்ளார். இதையடுத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்க்கையில், தீபிகா இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் தரையில் விழுந்து கிடந்துள்ளார்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனபோது, அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவினாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை ஆசையாய் தூக்கி முத்தம் கொடுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு கணவனே மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 1 வயது குழந்தையைத் துப்பாக்கியால் சுட்டு கொன்ற 8 வயது சிறுவன் : கள்ள துப்பாக்கி வைத்திருந்த தந்தை கைது!