India
பானி பூரி விற்பனைக்குத் தடை.. உணவு பிரியர்கள் அதிர்ச்சி: காரணம் என்ன?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஸ்னாக்ஸாக பானி பூரி உள்ளது. எத்தனையோ ஸ்னாக்ஸ் வந்தாலும் இன்னும் பானி பூரிக்கு மவுசு குறையவில்லை. ஆனால் அவ்வப்போது சுகாதார பிரச்சனையில் மட்டும் இந்த பானி பூரி உணவு சிக்கி வருகிறது.
கடந்த ஆண்டு கூட சாலையோரத்தில் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தும் ஒருவர் தனது சிறுநீரை பானி (நீர்) உள்ள பக்கெட்டில் கலக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி, அடிக்கடி சாலையோ பானிபூரி கடைகள் சுகாதார சர்ச்சையில் சிக்கி வருகிறது. இருப்பினும் பானி பூரி பிரியர்கள் தொடர்ந்து பானி பூரியை சுவைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
இந்நிலையில்,நேபாள மாநிலம், காத்மாண்டுவில் காலரா நோய்கள் பரவலுக்கு வழிவகுத்தாக கூறி பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காத்மண்டு நகராட்சியில் சில நாட்களாக சிலர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இது குறித்து மருத்துவர்கள் குழு விசாரணை செய்ததில், பானி பூரியில் வழங்கப்படும் தண்ணீர் மூலமாகக் காலரா நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து பானி பூரி விற்பனைக்கு காத்மாண்டு நகராட்சி தடை விதித்துள்ளது.
மேலும், காலரா நோய் பரவால் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பானி பூரி தடை விதிக்கப்பட்டுள்ளது உணவு பிரியர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!