India
“நகைக்கடையில் கொள்ளை.. உரிமையாளரை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள்” : வடக்கில் தொடரும் அவலம் - CCTV வீடியோ!
பிகாரில் உள்ள ஹஜிபூர் என்னும் இடத்தில் கடந்த ஜூன் 22ஆம் நாள் நகைக்கடை ஒன்றில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டிய அவர்கள், நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது கொள்ளையர்களின் செயலை கடை உரிமையாளர் சுனில் பிரியதர்ஷி கடுமையாக எதிர்த்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள் இறுதியாக அவரை சுட்டு கொன்றனர்.
இந்த சம்பவம் பிகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாததால் காவல்துறைக்கு நெருக்கடி எழுந்துள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!