India

“நகைக்கடையில் கொள்ளை.. உரிமையாளரை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள்” : வடக்கில் தொடரும் அவலம் - CCTV வீடியோ!

பிகாரில் உள்ள ஹஜிபூர் என்னும் இடத்தில் கடந்த ஜூன் 22ஆம் நாள் நகைக்கடை ஒன்றில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டிய அவர்கள், நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது கொள்ளையர்களின் செயலை கடை உரிமையாளர் சுனில் பிரியதர்ஷி கடுமையாக எதிர்த்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள் இறுதியாக அவரை சுட்டு கொன்றனர்.

இந்த சம்பவம் பிகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாததால் காவல்துறைக்கு நெருக்கடி எழுந்துள்ளது.

Also Read: “தெரியாமல் சொல்லிவிட்டேன்.. எனக்கு இதுதேவைதான்..” : பஞ்சாங்கம் விவகாரத்தில் சரண்டர் ஆன நடிகர் மாதவன்!