India
”எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வெற்றி வாய்ப்பு உறுதி”: தி.மு.க MP திருச்சி சிவா பேட்டி!
இந்திய நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக 2017ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அண்மையில் அறிவித்துள்ளார்.
இதையடுத்து காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தனர்.
பின்னர், குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து இன்று சரத்பவார் தலைமையில் மீண்டும் ஆலோசனை நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது முடிவை தி.மு.க மாற்றிக் கொள்ளாது என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, "அரசியல் அனுபவம் நிறைந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவரை குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க தனது முடிவை மாற்றிக் கொள்ளாது. யஷ்வந்த் சின்ஹா வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!