India
கை, கால்களைக் கட்டி.. 5 வயது மகளுக்குக் கொடூர தண்டனை வழங்கிய தாய்: நடந்தது என்ன?
டெல்லியில் உள்ள துக்மீர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சப்னா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சப்பான, வீட்டுப்பாடம் செய்யாத தனது 5 வயது மகளின் கை, கால்களைக் கட்டி மொட்டை மாடியில் உச்சி வெய்யிலில் படுக்கவைத்து தண்டனை கொடுத்துள்ளார்.
பின்னர், வெப்பம் தாக்க முடியாமல் சிறுமி கதறித் துடித்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டு கீழே வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பொதுவாகவே சிறுமியின் தாய் முரட்டுக் குணம் கொண்டவர் என்றும் குளிர் காலத்தில் கூட உடைகள் இல்லாமல் குழந்தைகளை நிர்வாணமாக நிற்க வைத்து தண்டனை கொடுத்துள்ளார் என அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சிறுமியின் கை,கால்கள் கட்டப்பட்ட சிலையில் மொட்டை மாடியில் வலியால் துடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து டெல்லி போலிஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !