India
மசூதியை வைத்து வன்முறையை தூண்ட சதி.. கர்நாடகாவில் 144 தடை.. துணை ராணுவ படை குவிப்பு : பின்னணி என்ன?
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டனா தாலுக்காவில் ஹனுமன் கோவிலை இடித்துவிட்டு ஜமியா மசூதி கட்டப்பட்டதாக கூறி வி.ஹேச்.பி அமைப்பினர் பேரணி நடத்த அழைப்பு விடுத்ததை தொடர்ந்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டனா தாலுக்காவில் உள்ள ஜமியா மசூதியானது ஹனுமன் கோவிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாகவும், மசூதியின் உள்ளே விநாயகர் கோவில் உள்ளதாகவும் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று பேரணி நடத்தவும், மசூதியில் பூஜை செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை அடுத்து ஸ்ரீரங்கபட்டன தாலுக்காவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு பேரணிகள், ஊர்வலங்கள், பொது கூட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட போலிஸார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தல் அமைப்பினர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு பேரணியாக வந்தவனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் ஸ்ரீரங்கபட்டனா தாலுக்காவில் பெறும் பதற்றம் நிலவி வருகிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!