India
வாக்கிங் சென்ற கர்ப்பிணி பெண்ணிடம் நகை பறிப்பு.. புதுச்சேரியில் பரபரப்பு.. போதை ஆசாமி சிக்கியது எப்படி?
புதுச்சேரியில் நடைபயிற்சி மேற்கொண்ட நிறைமாத கர்ப்பிணியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துச் சென்ற ஆந்திராவை சேர்ந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, தர்ம அடி கொடுத்து போலிஸிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி கோவிந்தாலை புதுநகரை சார்ந்த மோகன் என்பரின் உறவினர் அபி (28). நிறைமாத கர்ப்பிணியான இவர் இரவு வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அபி கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
இதனையடுத்து அவர் கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் சங்கிலியை பறித்து சென்ற நபரை துரத்தி மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து உச்சக்கட்ட மதுபோதையில் இருந்த நபரை ஒதியஞ்சாலை போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் முதல்கட்ட விசாரணையில், அந்த நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அபி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சரடு மற்றும் 1 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றபோது, 1 சவரன் தங்க சங்கிலி மட்டும் பறித்துள்ளான்.
மேலும் பொதுமக்கள் விரட்டியதில் அந்த 1 சவரன் தங்க சங்கலியை அந்த மர்ம நபர் எங்கே தவறவிட்டார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அந்த நபரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!