India
வாக்கிங் சென்ற கர்ப்பிணி பெண்ணிடம் நகை பறிப்பு.. புதுச்சேரியில் பரபரப்பு.. போதை ஆசாமி சிக்கியது எப்படி?
புதுச்சேரியில் நடைபயிற்சி மேற்கொண்ட நிறைமாத கர்ப்பிணியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துச் சென்ற ஆந்திராவை சேர்ந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, தர்ம அடி கொடுத்து போலிஸிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி கோவிந்தாலை புதுநகரை சார்ந்த மோகன் என்பரின் உறவினர் அபி (28). நிறைமாத கர்ப்பிணியான இவர் இரவு வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அபி கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
இதனையடுத்து அவர் கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் சங்கிலியை பறித்து சென்ற நபரை துரத்தி மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து உச்சக்கட்ட மதுபோதையில் இருந்த நபரை ஒதியஞ்சாலை போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் முதல்கட்ட விசாரணையில், அந்த நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அபி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சரடு மற்றும் 1 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றபோது, 1 சவரன் தங்க சங்கிலி மட்டும் பறித்துள்ளான்.
மேலும் பொதுமக்கள் விரட்டியதில் அந்த 1 சவரன் தங்க சங்கலியை அந்த மர்ம நபர் எங்கே தவறவிட்டார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அந்த நபரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!
-
“சொத்துவரி உயர்வு.. சென்னை மக்கள் தலையில் பேரிடி” : முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!