India
வாக்கிங் சென்ற கர்ப்பிணி பெண்ணிடம் நகை பறிப்பு.. புதுச்சேரியில் பரபரப்பு.. போதை ஆசாமி சிக்கியது எப்படி?
புதுச்சேரியில் நடைபயிற்சி மேற்கொண்ட நிறைமாத கர்ப்பிணியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துச் சென்ற ஆந்திராவை சேர்ந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, தர்ம அடி கொடுத்து போலிஸிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி கோவிந்தாலை புதுநகரை சார்ந்த மோகன் என்பரின் உறவினர் அபி (28). நிறைமாத கர்ப்பிணியான இவர் இரவு வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அபி கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
இதனையடுத்து அவர் கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் சங்கிலியை பறித்து சென்ற நபரை துரத்தி மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து உச்சக்கட்ட மதுபோதையில் இருந்த நபரை ஒதியஞ்சாலை போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் முதல்கட்ட விசாரணையில், அந்த நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அபி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சரடு மற்றும் 1 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றபோது, 1 சவரன் தங்க சங்கிலி மட்டும் பறித்துள்ளான்.
மேலும் பொதுமக்கள் விரட்டியதில் அந்த 1 சவரன் தங்க சங்கலியை அந்த மர்ம நபர் எங்கே தவறவிட்டார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அந்த நபரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!