India
நரம்பில் செலுத்திக் கொண்ட போதை ஊசியால் நடந்த விபரீதம்.. துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!
பஞ்சாப் மாநிலம், லூதியான பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இளைஞரான இவர் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் நரம்பில் போதை ஊசி செலுத்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் ஃபரித்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் ராஜ்குமாருக்குப் போதைப் பொருட்களைக் கொடுத்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் லூதியான பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான நரம்பில் போதை ஊசி செலுத்தியதால் ராஜ்குமார் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Also Read
-
ரூ.50 ஆயிரம் மாமுதல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!