India
“அசானி புயலால் கரை ஒதுங்கிய தங்க தேர்..?” - வியப்பில் ஆழ்ந்த மக்கள்: ஆராய்ச்சியில் இறங்கிய அதிகாரிகள்!
அசானி புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள சுன்னப்பள்ளி கடலில் விசித்திரமான தேர் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட பொதுமக்கள், அந்தத் தேரைக் கரைக்கு இழுத்து வந்தனர்.
தேரின் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்டு காணப்படுகிறது. அதுமட்டுமின்றி மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புயலின் காரணமாக இந்தத் தேர் அடித்து வந்திருக்கக் கூடும் என்று கூறுகின்றனர்.
அசானி புயல் எதிரொலியாக கடந்த சில தினங்களாக 13 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையிலும் மெரினா கடற்கரையில் கடந்த சில தினங்களாக கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!