India
“அசானி புயலால் கரை ஒதுங்கிய தங்க தேர்..?” - வியப்பில் ஆழ்ந்த மக்கள்: ஆராய்ச்சியில் இறங்கிய அதிகாரிகள்!
அசானி புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள சுன்னப்பள்ளி கடலில் விசித்திரமான தேர் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட பொதுமக்கள், அந்தத் தேரைக் கரைக்கு இழுத்து வந்தனர்.
தேரின் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்டு காணப்படுகிறது. அதுமட்டுமின்றி மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புயலின் காரணமாக இந்தத் தேர் அடித்து வந்திருக்கக் கூடும் என்று கூறுகின்றனர்.
அசானி புயல் எதிரொலியாக கடந்த சில தினங்களாக 13 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையிலும் மெரினா கடற்கரையில் கடந்த சில தினங்களாக கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!