India
“அசானி புயலால் கரை ஒதுங்கிய தங்க தேர்..?” - வியப்பில் ஆழ்ந்த மக்கள்: ஆராய்ச்சியில் இறங்கிய அதிகாரிகள்!
அசானி புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள சுன்னப்பள்ளி கடலில் விசித்திரமான தேர் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட பொதுமக்கள், அந்தத் தேரைக் கரைக்கு இழுத்து வந்தனர்.
தேரின் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்டு காணப்படுகிறது. அதுமட்டுமின்றி மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புயலின் காரணமாக இந்தத் தேர் அடித்து வந்திருக்கக் கூடும் என்று கூறுகின்றனர்.
அசானி புயல் எதிரொலியாக கடந்த சில தினங்களாக 13 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையிலும் மெரினா கடற்கரையில் கடந்த சில தினங்களாக கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!