India
“அசானி புயலால் கரை ஒதுங்கிய தங்க தேர்..?” - வியப்பில் ஆழ்ந்த மக்கள்: ஆராய்ச்சியில் இறங்கிய அதிகாரிகள்!
அசானி புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள சுன்னப்பள்ளி கடலில் விசித்திரமான தேர் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட பொதுமக்கள், அந்தத் தேரைக் கரைக்கு இழுத்து வந்தனர்.
தேரின் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்டு காணப்படுகிறது. அதுமட்டுமின்றி மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புயலின் காரணமாக இந்தத் தேர் அடித்து வந்திருக்கக் கூடும் என்று கூறுகின்றனர்.
அசானி புயல் எதிரொலியாக கடந்த சில தினங்களாக 13 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையிலும் மெரினா கடற்கரையில் கடந்த சில தினங்களாக கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !