India
நடுரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - ராஜஸ்தானில் நடந்த கொடூரம் !
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்னின் தந்தை அளித்த புகாரின்படி , 30 வயதான அவரது மகள் மே 4 ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி சித்தோர்கர் கோட்டைக்கு வந்துள்ளார். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை அங்கிருந்த ஒரு கும்பல் சாலையின் மூலையில் வைத்து ஒவ்வொருவராக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதன் பின்பு அந்தப் பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை சித்தோர்கர் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்பு பாதிக்கப்பட்ட பெண் சைகைகள் மூலமாக நடந்ததைக் கூறியது, ஹைவான் சி.சி.டி-வியில் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கலுராம் என்கிற ஹக்லா, அனில் என்கிற கலு ஷர்மா, கச்சோரியா என்கிற சேத்தன், பிரஹலாத் சால்வி, தேவ்ராஜ், ஆஷிஷ் சர்மா, ரத்தன்லால் உள்ளிட்ட 7 பேரின் பெயர்களை போலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போலிஸார் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலிஸார் இதுவரை எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேலும் தீவிரமாகக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!