India
பெற்ற மகளை தன் இச்சைக்கு இரையாக்கிய கொடூர தந்தை; எதிர்க்காத தாய்: வீடியோ எடுத்து உதவி கேட்ட 18 வயது பெண்!
வட மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளை பெற்ற மகளை, உடன் பிறந்த சகோதரியை, கட்டிய மனைவியை என பெண்களை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூரில் ஆசிரியராக பணியாற்றும் தந்தை ஒருவர் தனது 18 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
50 வயதான அந்த நபர் 18 வயது மகளை தொடர்ந்து தனது இச்சைக்கு இரையாக்கியிருக்கிறார். இதுபோக, ஈன்றெடுத்த தாயே இந்த கொடூரத்தை தட்டிக்கேட்காமல் எதிர்க்காமல் இருந்திருக்கிறார். மேலும் தாயின் சகோதரரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மாமாவுமான அந்த நபர் அமைதியாக இருக்குமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருக்கிறாராம்.
எவரது உதவியும் கிடைக்காமல் தந்தையின் கொடூரத்தால் சிக்கித் தவித்து வந்த அப்பெண், தன்னை அப்பா வன்கொடுமை செய்வதை அறையில் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலம் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியேற்றி தனக்கு உதவுமாறு கோரியிருக்கிறார்.
இதனைக் கண்ட இணையவாசிகள் ரோசேராவில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர், வீடியோவில் இருந்த அந்த நபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டி.எஸ்.பி. சாஹியர் அக்தர் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் தற்போது சமஸ்திபுரம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
Also Read
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!
-
”வாக்கு திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” : மீண்டும் ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!