India
திடீரென பெய்த ஆலங்கட்டி மழை.. வேரோடு சாய்ந்த மரம்.. நூற்றுக்கணக்கான கிளிகள் பலியான சோகம்!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் தாலுகாவில் உள்ள கனரா வங்கி அருகே ஏராளமான கிளிகள் அங்குள்ள மரத்தில் வசித்து வந்தன.
இந்த நிலையில் நேற்று (மே 01) அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் கிளிகள் வசித்து வந்த மரம் வேருடன் சாய்ந்தது.
இதன் காரணமாக மரத்தில் இருந்த கிளிகள் கிளைகளுக்கு இடையே சிக்கி கொண்டது. மேலும் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் ஏராளமான கிளிகள் பலத்த காயமடைந்தன. இதில் நூற்றுக்கணக்கான கிளிகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன.
இதனை அடுத்து அப்பகுதி மக்கள் உயிரிழந்த கிளிகளை சேகரித்து முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர். பல ஆண்டுகளாக மரத்தில் தஞ்சமடைந்து இருந்த கிளிகள் நேற்று பெய்த மழையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!