India
122 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம் அதிகரிப்பு.. மாநிலங்களை எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!
இந்தியாவில் ஏப்ரல் தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட அக்னி வெயில் துவங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபேரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சராசரியாக 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியுள்ளது. இது 122 ஆண்டுகளில் இல்லதா வெப்பநிலை பதிவாகும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜம்மு காஷ்மீர் , பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் ராஜஸ்தான், குஜராத் , மத்தியப் பிரதேசம் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மேலும் ராஜஸ்தான், மத்திய பிரதசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்துக் காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில், வெயில் தாக்கமும் அதிகரித்துள்ளது மக்களை இன்னும் வாட்டி வதைக்கக்குடிய ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் Black and Red தான் ; 2.0 ஸ்டார்ட்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
விவசாயிகளின் உரிமைக்கான ”அரிசி” படம் நிச்சயம் வெல்லும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டு மீனவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி: இலங்கை சென்றடைந்த இந்திய அணி! - முழு விவரம்
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!