India

கேட்காமல் சமோசா எடுத்த நபரை அடித்துக் கொலை செய்த டீ கடை உரிமையாளர்.. ம.பி-யில் பயங்கரம்!

மத்திய பிரதேச மாநிலம், போபால் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ஹிர்வாஸ். கொத்தனாரான இவர் டீ கடை ஒன்றுக்குச் சென்றுள்ளார். அப்போது தட்டில் வைக்கப்பட்டிருந்த சமோசாவை எடுத்துச் சாப்பிட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் ஹரி சிங் ஹிர்வார் மற்றும் அவரது மகன் சீதாராம் ஆகியோர் அவரை, “ஏன் சமோசாவை கேட்காமல்' எடுத்து சாப்பிட்டாய்?” எனக் கேட்டு கொடூரமாக அடித்துள்ளனர்.

இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, டீ கடை உரிமையாளர் மற்றும் அவரது மகனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் நடந்தபோது வினோத் ஹிர்வாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கடை உரிமையாளரிடம் கேட்காமல் சமோசா எடுத்த நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வெறுப்பு பேச்சை தடுக்க என்ன நடவடிக்கைதான் எடுத்திருக்கிறீர்கள்? - பாஜக மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம்!