India
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. உடலை கிணற்றில் வீசி சென்ற கொடூரம்: ராஜஸ்தானில் பயங்கரம்!
ராஜஸ்தான் மாநிலம், பாசி என்ற பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க குடும்பத்துடன் வந்த சிறுமி ஒருவர் திடீரென மாயமாகியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் சிறுமியை பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். இருப்பினும் சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பின்னர் இது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் சிறுமியிடம் கடைசியாகப் பேசியவரைப் பிடித்து போலிஸார் விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அந்த நபர் அழைத்துச் சென்று வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பிறகு யாருக்கும் தெரியாமல் அருகே இருந்த கிணற்றில் சிறுமியின் உடலை வீசியதாக போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் சிறுமியை வன்கொடுமை செய்த நபரை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!