India
“திருமணம் நடந்த ஒருவாரத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை” - போலிஸ் விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!
ஆந்திர மாநிலம், மாச்சேர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண் குமார். இவருக்கு கடந்த 11ம் தேதி தெனாலி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அடுத்த நாள் புதுமணத் தம்பதிகள் இருவர் மட்டும் குண்டூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென கிரண் குமார் காணாமல் போனதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் காணவில்லை என உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலிஸார் விசாரணை செய்து வந்த நிலையில், கிருஷ்ணா நதியின் அருகே ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பிறகு அங்கு சென்று ஆண் சடலத்தை மீட்டு விசாரணை செய்தபோது, காணாமல்போன கிரண் குமார் என்பது தெரியவந்தது. மேலும் கிரண் குமாருக்கு முதலிரவில் அச்சம் இருந்துள்ளது. இது குறித்து அவர் உறவினர்களிடம் கூறிவந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!