India
“திருமணம் நடந்த ஒருவாரத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை” - போலிஸ் விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!
ஆந்திர மாநிலம், மாச்சேர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண் குமார். இவருக்கு கடந்த 11ம் தேதி தெனாலி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அடுத்த நாள் புதுமணத் தம்பதிகள் இருவர் மட்டும் குண்டூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென கிரண் குமார் காணாமல் போனதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் காணவில்லை என உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலிஸார் விசாரணை செய்து வந்த நிலையில், கிருஷ்ணா நதியின் அருகே ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பிறகு அங்கு சென்று ஆண் சடலத்தை மீட்டு விசாரணை செய்தபோது, காணாமல்போன கிரண் குமார் என்பது தெரியவந்தது. மேலும் கிரண் குமாருக்கு முதலிரவில் அச்சம் இருந்துள்ளது. இது குறித்து அவர் உறவினர்களிடம் கூறிவந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!