India
பாஜக தலைவர் பிறந்த நாள் விழாவில் பாதுகாப்பில்லாத பந்தல் சரிந்து 10க்கும் மேலான பெண்கள் படுகாயம்!
புதுச்சேரியில் பா.ஜ.க மாநில தலைவர் பிறந்தநாள் விழாவில், பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் சரிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதனின் பிறந்தநாள் விழா லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு கொண்டாடப்பட்டது. விழாவில் பா.ஜ.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் சாமிநாதனின் பிறந்தநாளையொட்டி கூட்டத்தை சேர்ப்பதற்காக, பிறந்தநாள் விழாவுக்கு வருபவர்களுக்கு இலவச பரிசு பொருட்கள் தரப்படும் என சாமிநாதனின் ஆதரவாளர்கள் லாஸ்பேட்டை தொகுதி முழுவதும் தகவல் பரப்பினர்.
இதனால் விழா நடைபெற்ற இடத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூடினர். அப்போது அங்கு பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த விழா பந்தல் திடீரென சரிந்து விழுந்ததில் 10 க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த பெண்களுக்கு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!