India
2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 6 கயவர்கள்: விசாரணையின் போது அதிர்ச்சியடைந்த போலிஸ்!
ஜார்க்கண்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மேலும் அவரின் நண்பர்கள் 5 பேருக்கு போன் செய்து அவர்களையும் அங்கு வரவழைத்துள்ளார்.
பின்னர், 6 பேரும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை வழிமறித்து வலுக்கட்டியாமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அவரது தோழிக்கும் போன் செய்து அங்கு வருமாறும் மிரட்டியுள்ளனர்.
இதனால், அந்த பெண்ணும், அவரது தோழிக்கு போன் செய்து அங்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த அவரின் தோழியையும் அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களை வன்கொடுமை செய்த 6 பேரில் 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!