India
“என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? - உங்கள் அஜென்டா என்ன?” : நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்!
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்துப் பேசினார். அப்போது, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான்.
இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும். இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்றார். உள்துறை அமைச்சரின் இந்த கருத்துக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், " உள்துறை அமைச்சரே உங்களின் இந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்கள்? எங்கள் மீது இந்தியை திணிக்காதீர்கள்.
நாங்கள் பன்முகத்தன்மையை விரும்புகிறோம். எங்கள் தாய்மொழியையும் அடையாளத்தையும் நேசிக்கிறோம். நாங்கள் என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? உங்கள் அஜென்டா என்ன? ' என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!