India
122 ஆண்டுகளுக்கு பிறகு வாட்டி வதைத்த வெப்பநிலை.. மார்ச் மாத நிலை தெரியுமா? - இந்திய வானிலை ஷாக் தகவல்!
1901 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் அதிகபட்ச வெயில் அளவு மார்ச் - 2022இல் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி மாத இறுதி முதல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் மக்களைக் கடுமையாக வாட்டி வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் 1901ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு சென்ற மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது என தெரியவந்துள்ளது.
அதன்படி, நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.
இது மார்ச் மாதத்தில் நிலவும் சராசரி கோடைவெப்ப நிலையை விட 1.86 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1901-ம் ஆண்டில் பதிவாகிய அதிகபட்ச வெயிலின் அளவு கடந்த 2010-ம் ஆண்டு 33 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!