India
122 ஆண்டுகளுக்கு பிறகு வாட்டி வதைத்த வெப்பநிலை.. மார்ச் மாத நிலை தெரியுமா? - இந்திய வானிலை ஷாக் தகவல்!
1901 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் அதிகபட்ச வெயில் அளவு மார்ச் - 2022இல் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி மாத இறுதி முதல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் மக்களைக் கடுமையாக வாட்டி வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் 1901ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு சென்ற மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது என தெரியவந்துள்ளது.
அதன்படி, நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.
இது மார்ச் மாதத்தில் நிலவும் சராசரி கோடைவெப்ப நிலையை விட 1.86 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1901-ம் ஆண்டில் பதிவாகிய அதிகபட்ச வெயிலின் அளவு கடந்த 2010-ம் ஆண்டு 33 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !