India
‘தமிழ்நாடு Chief Minister எங்களுக்குத் தெரியும்’.. டெல்லி மாதிரிப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பதில்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான்கு நாள் அரசு முறைப் பயணமாக தற்போது டெல்லியில் உள்ளார் என்பதை அறிவோம். இந்த நிலையில் நேற்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
அதுமட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்களுடன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பாகச் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில் ஒரு சுவாரசியமான சம்பவம் அங்கு நடந்தது.
அது என்னவென்றால், டெல்லி முதலமைச்சர் அப்பள்ளி ஒன்றின் மாணவ - மாணவிகளிடம் “இவர் தமிழ்நாடோட சீஃப் மினிஸ்டர், உங்களுக்குத் தெரியுமா’’ என்ற கேள்வியைக் கேட்டார். அதற்குப் பள்ளி மாணவர்கள் எல்லாருமே “எங்களுக்குத் தெரியும்” என்று பதில் சொன்னார்கள்.
அது தவிர, “டெல்லிப் பள்ளிகளில் எந்த மாதிரியான கல்விமுறை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது?” என்று கேட்க, வகுப்பறையில் இருந்த ஒவ்வொரு மாணவியும் எழுந்து அவர்களது கல்வி முறையைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விளக்கிக் கூறினார்கள்.
அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடனிருந்தார்.
Also Read
-
"பும்ரா, ரஷித்கான் போன்ற பௌலர்கள் எல்லா அணிகளிலும் இல்லை" - Impact Player விதிமுறைக்கு கோலி எதிர்ப்பு !
-
“இரண்டு கதாபாத்திரமும் ஒன்றுதான்” : மோடியை மறைமுகமாக விமர்சித்த சுப்ரியா ஸ்ரீனேட் !
-
சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் தொடர் குளறுபடி - திடீரென்று உயர்ந்த 1 கோடி வாக்குகள்: மோடி அரசு செய்த சதி என்ன?
-
”பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை வீட்டையே தீ வைத்து எரித்து விடும்” : உத்தவ் தாக்கரே கடும் சாடல்!