India

பேண்ட் ஜிப்பை கழற்றிய நபர்... தர்ம அடி கொடுத்து போலிஸாரிடம் ஒப்படைத்த கல்லூரி மாணவி!

மும்பை, விலே பார்வேலியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரியில் நடந்த தேர்வை முடித்துவிட்டு அருகே இருக்கும் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர் மாணவியைப் பார்த்ததும் பாலியல் சைகை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி வேகமாக அங்கிருந்து நடந்து செல்ல முயன்றுள்ளார்.

ஆனால் அந்த நபர் தனது பேண்ட் ஜிப்பை கழற்றிவிட்டு மாணவியை நெருங்கிச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி அந்நபரைப் பிடித்து சரமாரியாக அடித்துள்ளார். பிறகு உடனே இதுகுறித்து போலிஸாருக்கும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த போலிஸாரிடம் அந்த நபரை ஒப்படைத்துள்ளார். பிறகு காவல்நிலையம் சென்று அவர் மீது புகார் செய்துள்ளார். மாணவியின் இந்த தைரியத்தைப் பார்த்து போலிஸார் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: “டியூஷனுக்கு வந்த மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை”: வீடியோ எடுத்து மிரட்டல் - பகீர் சம்பவம்!