India
11 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய பந்து.. விளையாடும்போது நேர்ந்த சோகம் !
கேரள மாநிலம், திருச்சூர் இரிஞ்ஞாலகுடா பகுதியைச் சேர்ந்தவர் நிதின். இவரது மனைவி தீபா. இந்த தம்பதிக்கு மீரவ் கிருஷ்ணன் என்ற 11 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில், வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிதின் விடுமுறையில் குழந்தையைப் பார்க்கச் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது குழந்தைக்கு ஏராளமான விளையாட்டுப் பொருட்களை வாங்கி வந்துள்ளார்.
பிறகு விடுமுறையை விடுத்து விட்டு அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், குழந்தை, தந்தை வாங்கி வந்த சிறிய பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அக்குழந்தை பந்தை விழுங்கியதும் தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் தீபா, உடனே குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டையில் சிக்கிய பந்தை எடுக்க முயற்சி செய்தனர்.
ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடும்போது 11 மாத குழந்தையின் தொண்டையில் பந்து சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நேற்றுவரை ‘வாட்நகர் நாயகன்’ இன்று கங்கை கொண்டானா? : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
நாய்க்கு இருப்பிட சான்றிதழ்! : தேர்தல் ஆணையத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை!
-
ஒரு வாரமாக நடைபெறாத விவாதம்... நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு துரோகம் செய்யும் ஒன்றிய பாஜக அரசு : முரசொலி !
-
தூத்துக்குடி விமான நிலையம்... நிலத்தை கையகப்படுத்தி கொடுத்த தமிழ்நாடு அரசு... அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !
-
மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு... உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு !