India
“உள்ளூர் மக்கள் டோல்கேட்டில் கட்டணம் செலுத்தவேண்டாம்?” : நிதின் கட்கரி சொன்னது என்ன?
சுங்கச்சாவடிக்கு அருகே வசிக்கும் உள்ளூர் மக்கள் கட்டணம் செலுத்தவேண்டாம் எனும் நடைமுறை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று நடந்த கூட்டத்தொடரின்போது சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “தேசிய நெடுஞ்சாலைகளில் இனி 60 கி.மீ தூரத்துக்கு இடையே ஒரேயொரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். ஒருமுறை சுங்கக்கட்டணம் செலுத்திவிட்டால் அடுத்த 60 கி.மீ தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் இருக்காது.
தற்போது, 60 கி.மீ தூர இடைவெளிக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
சுங்கச்சாவடிக்கு அருகே வசிக்கும் உள்ளூர் மக்கள் ஆதார் அட்டையை காண்பித்தால் போதும் கட்டணம் செலுத்தவேண்டாம் எனும் நடைமுறை குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் ஆதார் அட்டை வைத்திருக்கும் உள்ளூர் மக்களுக்கு பாஸ் வழங்க உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்