India
தவறான நண்பர்களுடன் Instagram-ல் பழக்கம்.. பள்ளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
புதுச்சேரி மாநிலம், நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளிச் சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராம் வழியாகப் பேசிப் பழகி வந்துள்ளளனர்.
இதையடுத்து கடந்த 18ஆம் தேதி சிறுமியை நந்தகுமார் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் சென்று வன்கொடுமை செய்துள்ளார். அப்போது உடனிருந்த அவரது நண்பரும் அச்சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அச்சிறுமி நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரை அடுத்து வீட்டில் பதுங்கியிருந்த நந்தகுமார் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகிய இரண்டு பேரையும் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!