India
“உடனே இந்த சோதனையை தொடங்குங்க..” : மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் அவசர உத்தரவு என்ன?
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வந்ததையடுத்து மீண்டும் சீனா, தென் கொரியா நாடுகளில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.
இதனால் மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள். இந்தியாவிலும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா தொற்றின் 4வது அலை ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்ஃப்ளூயன்சா, sari போன்ற உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் தொற்றுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்கான சோதனைகளை மீண்டும் தொடங்கவேண்டும் என மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சுவாசத் தொற்றுகளோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் சோதனை செய்யப்படும்போது புதிய கொரோனா தொற்றுகளைக் கண்டறிய முடியும். மேலும் கொரோனா தடுப்பூசிகளை போட தகுதியுடையவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!