India
என்கவுன்டர் பயம்.. ’என்னை சுட்டுடாதீங்க’ - பதாகையுடன் பதறியடித்து காவல்நிலையம் ஓடிவந்த பிரபல ரவுடி!
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் கவுதம் சிங். ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இதனால் தலைமறைவாக உள்ள இவரை போலிஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில், கவுதம் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கோழி தீவன வியாபாரி ஒருவரை சில நாட்களுக்கு முன்பு கடத்தியுள்ளனர். மேலும் இவரி விடுதலை செய்ய வேண்டும் என ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் என அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு கவுதம் சிங்கை தேடிவந்தனர். மேலும் அவர் குறித்து தகவல் கொடுக்கும் நபருக்கு ரூ. 25 ஆயிரம் பணம் பரிசாகக் கொடுக்கப்படும் என போலிஸார் அறிவித்தனர்.
இந்நிலையில், பிரபல ரவுடி கவுதம் சிங் மற்றும் அவரது சகோதரருடன் என்னை சுட்டுவிடாதீர்கள் என்ற பதாகையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!