India
7 பேர் பலி.. 60 குடிசைகள் எரிந்து நாசம்: நள்ளிரவு டெல்லியை உலுக்கிய கொடூர சம்பவம்!
டெல்லியின் கோகுல்புரி பகுதியில் உள்ள குடியிருப்பில் இன்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்த அனைவரும் தூக்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளதால் பலர் தீயில் சிக்கியுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து 13 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், தீயில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் அடையாளம் தெரியாத வகையில் 7 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த உடல் முற்றிலுமாக எரிந்து உள்ளதால் யார் இறந்தது என அடையாளம் காண்பதில் போலிஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த பயங்கர தீ விபத்திற்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கள் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 1 கோ நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!