India
7 பேர் பலி.. 60 குடிசைகள் எரிந்து நாசம்: நள்ளிரவு டெல்லியை உலுக்கிய கொடூர சம்பவம்!
டெல்லியின் கோகுல்புரி பகுதியில் உள்ள குடியிருப்பில் இன்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்த அனைவரும் தூக்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளதால் பலர் தீயில் சிக்கியுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து 13 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், தீயில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் அடையாளம் தெரியாத வகையில் 7 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த உடல் முற்றிலுமாக எரிந்து உள்ளதால் யார் இறந்தது என அடையாளம் காண்பதில் போலிஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த பயங்கர தீ விபத்திற்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கள் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 1 கோ நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!