India
7 பேர் பலி.. 60 குடிசைகள் எரிந்து நாசம்: நள்ளிரவு டெல்லியை உலுக்கிய கொடூர சம்பவம்!
டெல்லியின் கோகுல்புரி பகுதியில் உள்ள குடியிருப்பில் இன்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்த அனைவரும் தூக்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளதால் பலர் தீயில் சிக்கியுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து 13 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், தீயில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் அடையாளம் தெரியாத வகையில் 7 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த உடல் முற்றிலுமாக எரிந்து உள்ளதால் யார் இறந்தது என அடையாளம் காண்பதில் போலிஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த பயங்கர தீ விபத்திற்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கள் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 1 கோ நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!