India
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர்.. உ.பி-யில் தொடரும் கொடூரம்!
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடித்து வீட்டிற்குச் சோர்வாக வந்துள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டுள்ளனர். அப்போது மாணவி தன்னை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் பள்ளி மாணவியைத் தனது அழைத்து அழைத்துச் சென்று வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த சம்பத்தில் மேலும் ஒரு ஆசிரியருக்குத் தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!