India
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர்.. உ.பி-யில் தொடரும் கொடூரம்!
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடித்து வீட்டிற்குச் சோர்வாக வந்துள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டுள்ளனர். அப்போது மாணவி தன்னை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் பள்ளி மாணவியைத் தனது அழைத்து அழைத்துச் சென்று வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த சம்பத்தில் மேலும் ஒரு ஆசிரியருக்குத் தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!