India
கல்குவாரியில் வெடிவைத்த போது நேர்ந்த விபரீதம்.. பாறையில் சிக்கி 10 பேர் பரிதாப பலி!
கர்நாடகா மாநிலம் கும்பகல்லு கிராமத்தில் அக்கீம் என்பவர் அரசின் அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியில் நேற்று வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்பட்டது. அப்போது வெடியில் ஏற்பட்ட அதிர்வுகள் காரணமாகப் பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு கீழே விழுந்தது.
அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் கீழே விழுந்த பாறையில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெற்றது. ஆனால், 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 6 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாறை உருண்டு விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?