India
சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் இருந்து செல்போனை திருடிச் சென்ற இளைஞர்கள்; அலறியடித்து ஓடிய வியாபாரி
புதுச்சேரி நகர பகுதியான மிஷின் வீதியில் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் பகுதியாகும்.
இந்நிலையில் தனது வியாபாரத்தை முடித்து விட்டு, அசதியில் பொம்மை வியாபாரி ஒருவர் தனது கடை அருகே தூங்கி கொண்டு இருந்தார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரை சுற்றி வந்து சட்டை பையில் இருந்த செல்போனை திருடி சென்றிருக்கிறார்கள். இதனை அடுத்து கண்விழித்து பார்த்த அந்த பொம்மை வியாபாரி அந்த கும்பலை நோக்கி ஓடினார். அதற்குள் அந்த திருட்டுக் கும்பல் தப்பியோடியிருக்கிறது.
செல்போனை பறிகொடுத்த பொம்மை வியாபாரி, இது தொடர்பாக பெரியகடை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் தூங்கிக் கொண்டிருந்த வியாபாரியிடம் இருந்து செல்போனை, எடுத்து செல்வது தெரிய வந்தது. தற்போது அந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!