India
எங்க ட்ரெஸ் பத்தி யார் புகார் கொடுத்தா? - கேள்வி கேட்ட போலிஸுக்கு பெண்கள் பதிலடி - புதுவையில் பரபரப்பு!
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதிநாட்களில் வெளிநாடு மற்றும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் சுற்றுலாப் பயணிகளை நிறுத்தி, அவர்களிடம் ஆடை கட்டுப்பாடு குறித்து போலிஸார் பேசும் வீடியோ ஒன்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதில், ``இந்த மாதிரி உடைகளை அணிந்து வரக் கூடாது” என்று கூறும் இரண்டு போலிஸாரிடம், ``எங்கள் உடை குறித்து உங்களிடம் யார் புகார் கொடுத்தது?” என்று கேட்கிறார்கள் அந்த பெண்கள்.
அதற்கு சரியாக பதிலளிக்க முடியாமல் அந்த போலிஸார் திணறுவபோல முடிவடைகிறது அந்த வீடியோ. இதனிடையே போலிஸாரின் இந்த செயலுக்கு, பெண்கள் அமைப்பினர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மே 7.. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று ஒலித்த குரலால் மின்னும் தமிழ்நாடு - வீடியோ வைரல்!
-
நீலகிரி வரையாடு பாதுகாப்பு: வரலாற்று சிறப்புமிக்க முன்னோடித் திட்டம் -முதலமைச்சருக்கு The Print பாராட்டு!
-
“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!