India
எங்க ட்ரெஸ் பத்தி யார் புகார் கொடுத்தா? - கேள்வி கேட்ட போலிஸுக்கு பெண்கள் பதிலடி - புதுவையில் பரபரப்பு!
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதிநாட்களில் வெளிநாடு மற்றும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் சுற்றுலாப் பயணிகளை நிறுத்தி, அவர்களிடம் ஆடை கட்டுப்பாடு குறித்து போலிஸார் பேசும் வீடியோ ஒன்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதில், ``இந்த மாதிரி உடைகளை அணிந்து வரக் கூடாது” என்று கூறும் இரண்டு போலிஸாரிடம், ``எங்கள் உடை குறித்து உங்களிடம் யார் புகார் கொடுத்தது?” என்று கேட்கிறார்கள் அந்த பெண்கள்.
அதற்கு சரியாக பதிலளிக்க முடியாமல் அந்த போலிஸார் திணறுவபோல முடிவடைகிறது அந்த வீடியோ. இதனிடையே போலிஸாரின் இந்த செயலுக்கு, பெண்கள் அமைப்பினர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மாணாக்கர்களின் கல்விக்காக... அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள்.. - அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Epstein Files... மோடியால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நிலைமை என்ன? - புட்டு புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி!
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!