India
எங்க ட்ரெஸ் பத்தி யார் புகார் கொடுத்தா? - கேள்வி கேட்ட போலிஸுக்கு பெண்கள் பதிலடி - புதுவையில் பரபரப்பு!
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதிநாட்களில் வெளிநாடு மற்றும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் சுற்றுலாப் பயணிகளை நிறுத்தி, அவர்களிடம் ஆடை கட்டுப்பாடு குறித்து போலிஸார் பேசும் வீடியோ ஒன்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதில், ``இந்த மாதிரி உடைகளை அணிந்து வரக் கூடாது” என்று கூறும் இரண்டு போலிஸாரிடம், ``எங்கள் உடை குறித்து உங்களிடம் யார் புகார் கொடுத்தது?” என்று கேட்கிறார்கள் அந்த பெண்கள்.
அதற்கு சரியாக பதிலளிக்க முடியாமல் அந்த போலிஸார் திணறுவபோல முடிவடைகிறது அந்த வீடியோ. இதனிடையே போலிஸாரின் இந்த செயலுக்கு, பெண்கள் அமைப்பினர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!