India
24 மணி நேர தொடர் போராட்டம்... 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் குட்டு, விளையாடிக்கொண்டிருக்கும்போது அப்பகுதியிலிருந்த 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து சிறுவனை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.
இதையடுத்த ஆழ்துளை கிணற்றுக்குள் கேமராக்கள் அனுப்பி சிறுவனின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் ஆழ்துளை கிணற்று பகுதியைச் சுற்றி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
பின்னர் 24 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு பேரிடர் மீட்புக்குழுவினர் சுரங்கப்பாதை வழியாகச் சிறுவனை உயிருடன் மீட்டனர். இதையடுத்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!