India
24 மணி நேர தொடர் போராட்டம்... 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் குட்டு, விளையாடிக்கொண்டிருக்கும்போது அப்பகுதியிலிருந்த 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து சிறுவனை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.
இதையடுத்த ஆழ்துளை கிணற்றுக்குள் கேமராக்கள் அனுப்பி சிறுவனின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் ஆழ்துளை கிணற்று பகுதியைச் சுற்றி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
பின்னர் 24 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு பேரிடர் மீட்புக்குழுவினர் சுரங்கப்பாதை வழியாகச் சிறுவனை உயிருடன் மீட்டனர். இதையடுத்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!