India
24 மணி நேர தொடர் போராட்டம்... 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் குட்டு, விளையாடிக்கொண்டிருக்கும்போது அப்பகுதியிலிருந்த 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து சிறுவனை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.
இதையடுத்த ஆழ்துளை கிணற்றுக்குள் கேமராக்கள் அனுப்பி சிறுவனின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் ஆழ்துளை கிணற்று பகுதியைச் சுற்றி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
பின்னர் 24 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு பேரிடர் மீட்புக்குழுவினர் சுரங்கப்பாதை வழியாகச் சிறுவனை உயிருடன் மீட்டனர். இதையடுத்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!